வானவல்லி எனும் நீண்ட பெரும்புதினம் எழுதிய காலத்தில் இளைப்பாறுதலுக்காக எழுதிய குறும்புதினம் தான் இந்த ‘மதுவன மாது’. மதுவன மாதுவை எழுத்தாளரே தன் வாழ்வில் நடக்கும் நிகழ்வைக் கூறுவதைப் போன்று புனைந்திருக்கிறேன்.
மதுவனம் என்பது தற்காலத்திய கொல்லி மலை. வாலியும், சுக்ரீவனும் ஆட்சி செய்த மதுவனம்தான் கொல்லி மலை என்ற தொன்ம தகவலும் உண்டு. கரிகாலன் நாட்டை இழந்து ஓடிய காலங்களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இதே கொல்லி மலை தான்.
வரலாற்றுக் கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பதைப் போன்று மதுவன மாதுவைப் புனைந்திருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.